Wednesday, November 3, 2010

பழைய எலும்புக்கூடு

5 லட்சம் ஆண்டு பழைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மாட்ரிட்: மனித வர்க்கத்தில் உலகில் மிகவும் முதன்மையானவர் என்று கருதப்படும் மாற்றுத் திறன் ஆணின் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகம்,

கார்லஸ்&3 ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளனர்.



ஸ்பெயினில் சிமா டி லாஸ் ஹ்யூசாஸ் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் தன்மை பரிசோதிக்கப்பட்டதில் அந்த எலும்புகள் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.



எல்விஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படிமம் இருந்த இடத்தில் மேலும் பல எலும்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிடைத்திருக்கும் எலும்புக்கூட்டுக்கு சொந்தக்காரர் மாற்றுத் திறனாளி, நடுத்தர வயதுக்காரர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Template by : kendhin x-template.blogspot.com