Saturday, September 25, 2010

புவிக்கோளத்தின் வாழ்வும் இறப்பும்

அதனுடைய 4.5 பில்லியன் வருட காலங்களில் எமது பூமி படிப்படியாக தனது வெப்பத்தை இழந்து வந்துவிட்டது. மிகுந்த வெப்பம் கொண்ட கிரகமாக பிறந்து இன்று சமுத்தரங்களால் சூழப்பட்டு மனிதனால் அறியப்பட்ட வரைக்கும் அண்டவெளியில் ஒரே ஒரு நீல நிற கோளமாக சஞ்சரிக்கின்றது பூமி. ஆனால் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தப்படி பூமி அதன் ...




அழிவுப்பாதையில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. எனப்படுகிறது. அவர்களுடைய கருத்துப்படி 4.5 பில்லியன் வருடம் என்பது பூமி தனது சூரியனின் கடிகாரத்தில் மு.ப 4.30 சென்றடைந்துவிட்டதற்கு சமம் எனப்படகின்றது இதன்படி மு.ப 5.00 மணிக்கு உலகினை 1 பில்லியன் வருடம் ஆட்சிசெய்து வந்த விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என்பன முடிவுக்கு வரும். தொடர்ந்து காலை 8.00 மணிக்கு சமுத்திரங்கள் ஆவியாகத்தொடங்கும் எனப்படகிறது. மதியம் அதாவது 12 பில்லியன் வருடங்களுக்கு பின் எமது சூரியன் தனது ஒளியினை இழந்து பாரிய சிவந்த ஒளிப்பிண்டம் போல் காட்சியளிக்கும். கோள்கள் சூரியனால் கவரப்பட்டு மறைக்கப்படும் இந்தவேளையில் பூமியும் இந்த அண்டவெளியில் உருக்குலைந்து மறைந்து போகும்.





என்கின்றனர் அவாகள். அந்தவகையில் எமது கோளினுடைய மறைவு இன்னும் 7.5 பில்லியன் வருடங்களுக்கு அப்பால் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் மக்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறும் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் அறிஞர் Donald Brownlee “நாம் இருக்கின்ற இப் பூமி எங்களுக்கு கிடைத்த அரிய செல்வம் நாம் இப் பூமியில் வாழ்கின்ற இக்காலம் மிகவும் அரியது ஆகையால் இப் பூமியை பாதுகாப்பதில் நாம் ஆர்வம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்” என்கிறார். இவருடைய நூலாகிய “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூல் பூமியின் இரண்டாவது அரைப்பகுதியில் உயிரின வாழ்க்கையின் சாத்தியக் கூறுகள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. Ward and Brownlee's என்பவர்களின் “அரிதான பூமி” (Rare Earth) என்ற நூல் பெருமளவில் பேசப்பட ஒரு நூல் என்பதுடன் அதிகளவில் விற்பனையாகிய நூலும் அகும்.




அண்டவெளியின் பல்லாயிரக்கணக்கான கோளங்களில் புவியின்
தனித்துவத்தினையும், சிறப்பத்தன்மையினையும் ஆராய்கின்றது இந்நூல். “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூலில் ஆசிரியர் புவியில் உயிரினங்களின் இறுதிக்காலங்களை விபரிக்கும்போது அது உயிரினங்களின் ஆரம்ப காலங்களை ஒத்ததாக இருக்கும் என்கிறார். புவியெங்கும் இருள் படரத்தொடங்கும்போது நிலப்பரப்பை காட்டிலும் சமுத்திரங்கள் சூடானதாக மாறும் அப்போது அழிந்த உயிரினங்கள் போக எஞ்சிய ஒருகல அங்கிகள், பற்றீறியாக்கள் கடலில் வாழ்விடத்தினை அமைத்துக்கொள்ளும். இறுதியில் இவ்வுயிரினங்களும் அழிந்துவிடும் என்கிறார் இந்நூலாசிரியர்.




இதற்குள் மனித இனம் வேற்று கிரகம் ஒன்றினை கண்டறிவதற்கான அவல் அதிகரித்து வந்தாலும். அக்கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அவை புவியில் உள்ள மனித இனத்தின் டீ.என்.ஏ தன்மைகளுடன் பொருத்தமற்றவையாகவே இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். ஆகவே இது ஓர் பாரிய சவாலாக மனித இனத்திற்கு இருக்கும் எனப்படுகிறது. இதற்கிடையில் வானியல் ஆய்வாளர்கள் எமது அண்டவெளி(Universe) மிகவும் பழையது என்ற கருத்துக்களையும் வெளியிட்டள்ளனர்.

Friday, September 24, 2010

மிதக்கும் நகரம்!

உலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், `மிதக்கும் நகரமாய்’ ஒரு கப்பல் உருவாக போகிறது. அப்படியென்ன அது பிரமாதம் என்கிறீர்களா? ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் `பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்! இதன் நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள்.



அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது. `பிரீடம் ஷிப்’ பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன.



இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி பார்க்கலாம். இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில், ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும்.



உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி, ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள் ஆகியவையும் அமையும். இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, `பவுலிங்’ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.



நீச்சல் குளம், பசும்புல்பரப்பு, `ஸ்கேட்டிங்’ வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவை உண்டு. ஒவ்வொரு குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம். இணைய வசதியும் உண்டு. இந்த மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு.



தவிர, கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கபடும். இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். இதன் கழிவுகளால் கடல் பாதிக்கபடாமல் அவை மறுசுழற்சி செய்யபடும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கபடும். இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல.



அதற்கென்று, தலா 3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்!

பூமிக்கு அருகில் ஜூபிடர்

புதுடெல்லி: ஜூபிடர் (வியாழன் கோள்) பூமிக்கு அருகில் வந்திருக்கிறது. அது பூமியில் இருந்து 368 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. கடந்த 1963-ம் ஆண்டிற்குப் பின் இப்பொழுது தான் பூமிக்கு அருகில் வந்திருக்கிறது.



இதை மாலை நேரத்தில் காணலாம். நள்ளிரவில் உச்சி வானில் அது தெரியும். அதேபோல யுரேனஸும் பூமிக்கு வெகு அருகில் வந்துள்ளது. இரண்டையும் மிகப் பிரகாசமான தோற்றத்தில் இன்று இரவு பார்க்க முடியும். வானுலக அதிசயம் குறித்த ஆர்வலர்களுக்கு இன்று இரவு இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்.



இந்த 2 கிரகங்களும் டிஸ்க் வடிவத்தில் பிரகாசமாக காணப்படுவதை அவர்கள் கண்டு களிக்கலாம். இது குறித்து சயின்ஸ் பாபுலரய்சேஷன் அசோசியேஷன் ஆப் கம்யூனிகேட்டர்ஸ் அன்ட் எஜுகேடர்ஸ் அமைப்பின் சந்திரபூஷன் தேவ்கன் கூறியதாவது,



சூரியன் மறைந்த பிறகு கிரகங்களிலேயே மிகப் பெரிய கிரகமான ஜூபிடர் வடக்கில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் நன்றாகப் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்கலாம். இது இன்னும் சில மாதங்களுக்கு காணப்படும்.

Monday, September 13, 2010

நலம் காட்டும் கடிகாரம்!

நலம் காட்டும் கடிகாரம்! `என்ன நல்லா இருக்கீங்களா?’
இப்படி நலம் விசாரிப்பது நமது பண்பாடு. இனி யாரும் உங்களை இப்படிக் கேட்டால் நீங்கள் மணி பார்ப்பதுபோல் கடிகாரத்தைப் பார்த்து `நலமாகத்தான் இருக்கிறேன்’ என்று பதில் சொல்லலாம். ஆமாம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதைக் காட்டும் கடிகாரம் வந்துவிட்டது.



ஐரோப்பிய ஆய்வுக்குழு ஒன்று நவீன கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் எலக்ட்ரானிக் பாலிமர் மற்றும் நவீன சென்சார் இருக்கும். இதை வழக்கமான கடிகாரம்போல் கையில் அணிந்து கொள்ளலாம். இதில் இருக்கும் நவீன கருவிகள் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து அறிவிக்கும்.



வியர்வை, உடல் வெப்பம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை கண்காணித்து நோய்த்தொற்றை கண்டுபிடிக்கும். இதற்காக எப்போதும் மின்காந்த அலைகளை உடலில் பரப்பிய வண்ணம் செயல் படும்.



மாரடைப்பு ஏற்படுவது, ரத்தம் உறைவது, ஈரப்பதம் குறைவது போன்ற பெரும்பாலான வியாதிகளின் அறிகுறிகளை மருத்துவ பரிசோதனைக்குச் செல்லாமலே காட்டிவிடும். வியாதிகளை ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் எளிதில் குணமாக்கி நலமாக வாழலாம்தானே!

40 கிலோ எடையில் மொபைல் போன்!

இன்று, அனைவரது கை களிலும், சில மில்லி கிராம் எடையில், தவழும் மொபைல் போன்கள், ஆரம்ப காலத்தில், தூக்க முடியாத அளவிற்கு, “வெயிட்’டாக இருந்தது என்றால், நம்ப முடி கிறதா? ஆரம்ப காலத்தில் டாக்சிகள், போலீஸ் வாக னங்கள், ஆம்புலன்ஸ்களில் மட்டுமே, “மொபைல் போன்’களின் முன்னோடியாக கருதப்படும், “ரேடியோ போன்கள்’ பொருத்தப்பட்டன; ஆனால், அவற்றில் இருந்து, பிற போன்களை தொடர்பு கொள்ள முடியாது.



“லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்’ என்பவர், தன் காரில் டெலிபோனை 1910ல் பொறுத்தினார். ஆனால், இது, “ரேடியோ போன்’ அல்ல. காரில் எங்காவது செல்வார்; டெலிபோன் இணைப்பு ஒயர்கள் இருக்கும் இடத்தில், தன் காரை நிறுத்தி, “நேஷனல் டெலிபோன் நெட்வொர்க்’ உடன் தொடர்பு கொண்டு, தான் பேச வேண்டிய இடத்திற்கு பேசுவார்.



ஐரோப்பாவில், பெர்லின்-ஹம்பர்க் நகரங்களுக்கிடையில் இயங்கிய பாசஞ்சர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில், ரேடியோ போன் 1926ல் அமைக்கப்பட்டது; அதே ஆண்டில், ஆகாய விமானங்களிலும் பொருத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் டேங்க்குகளிலும், 1950ம் வாக்கில், “ரைன்’ என்ற கப்பலிலும், ரேடியோ டெலிபோன்கள் பொருத்தப்பட்டன.



காரில் இருந்தபடியே மற்ற போன்களுக்கு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில், முழுமையான, “ரேடியோ போன்கள்’ 1956ல் ரஷ்ய இன்ஜினியர்கள் ஷாப்ரோ, சகார்ஷென்கோ ஆகியோர் கண்டுபிடித்தனர். இவற்றிலிந்து 20 கி.மீ., சுற்றளவில் தொடர்பு கொள்ள முடியும். தற்போதைய மொபைல் போன்களின் முன்னோடி, 1947ல் கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் எச் ரிங், ரே யெங், பெல் லேப்ஸ் ஆகிய இன்ஜினியர்கள், அறுகோண மொபைல் போன்களை வாகனங்களில் பொருத்தினர்.



இதற்காக, தனி டவர்களை அமைத்து, “சிக்னலை’ வாகனங்களில் பெறும் வகையில் வடிவமைத்திருந்தனர். ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியராக, லியோனிட் குப்ரியானோவிச், மாஸ்கோவில், போர்டபிள் மொபைல் போனை 1957ல் அமைத்தார். பின்னர் இது, “எல்கே-1 ரேடியோ போன்’ என்றழைக் கப்பட்டது. முன்னர் வடிவமைத்ததை விட, கையடக்கமான மொபைல் போனாக இருந்ததுடன், பிற போன்களை தொடர்பு கொள்ளும் டயலிங் வசதியும் இருந்தது.



இதன் மொத்த எடை மூன்று கிலோ; 20 முதல் 30 முதல் கி.மீ., வரை, இதிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். தொடர்ந்து 30 மணி நேரம் பேச முடியும். 1958ல், பாக்கெட் சைஸ் மொபைல் போன்களை தயாரித்தார்; இதன் எடை 500 கிராமாக இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 1950ல் மொபைல் போன்கள் வந்தன. எரிக்சன் உருவாக்கிய, “எம்.டி.ஏ., மொபைல் போன், 1956ல் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது; இதன் எடை 40 கிலோ. பின்னர், 1965ல் ஒன்பது கிலோ எடையாக குறைக்கப்பட்டது.



கார்களில் மட்டுமே பொருத்தப்பட்டதால், எடை ஒரு பிரச்னை யாக இருந்ததில்லை. ஐரோப்பாவில் முதன் முதலில் மொபைல் போன் உபயோகித்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து மன்னர் பிலிப் பெற்றார். 1957ல் தன் ஆஸ்டன் மார்டின் காரில் பொருத்தி, மகாராணி யுடன் பேசு வதற்காக பயன்படுத்தினார். அப்போதே காதலியுடன் பேச, மொபைல் போன் பயன்பட்டுள்ளது! நவீன மொபைல் போன்களுக்கான தொழில்நுட்பம் 1970ல் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது.



இதுவரை கார்களில் மட்டுமே பொருத்தப்பட்ட மொபைல் போன்களை, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், மோட்டராலோ கம்பெனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஹூப்பர் உருவாக்கினார். முதல் அழைப்பை, ஏப்ரல் 3, 1973ல், தன் சக போட்டியாளர் களான ஜோயல் ஏஞ்சல் மற்றும் பெல் லேப்ஸ் ஆகியோரிடம் பேசினார். பொதுமக்கள் பயன் பாட்டிற்கான முதல் ஜென ரேஷன் (1ஜி) மொபைல் போன் 1979ல் ஜப்பானில், என்.டி.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தியது.



அதன் பின், படிப்படியாக, மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பரவி, தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று கம்ப்யூட்டரையே கையில் கொண்டு சேர்க்கும் சாதனமாக, பிர மாண்ட வளர்ச்சி பெற்றுள் ளது. இன்று, மொபைல் போனில் சினிமா பார்க் கலாம்; கேம்ஸ் ஆட லாம்; “மொபைல் பேங்கிங்’ வசதி உள்ளது. பிடித்தமானவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்; தலைமறைவு குற்றவாளி களையும் கண்டறியலாம்; இவ்வளவு ஏன்… காதலர்களுக்கு தூது செல்லும் நவீன, “புறா’வாகவும் மாறி விட்டதே!

சிலந்தி மனிதன் போல

சுவரில் நடக்க உதவும் ஷூ

ஸ்பைடர் மேன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிலந்தி மனிதனான ஸ்பைடர்மேன் அநாயசமாக சுவர் விட்டு சுவர் தாவிச் செல்லும் காட்சியை குழந்தைகள் பிரமிப்புடன் ரசிப்பார்கள்.



அதுபோல் உண்மையிலேயே சுவரில் தாராளமாக நடந்து செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் ஆம் விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்காக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.



இந்தக் கருவி ஷூவின் நவீன வடிவம்போல உள்ளது. துணையாக குச்சியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை விரும்பாதவர்கள் குச்சியின்றியும் நடக்கலாம். அவர்களுக்கு ஒருவித உபகரணம் வழங்கப்படும். இந்த ஷூவை மாட்டிக் கொண்டு சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) போல நீங்களும் சுவரில் நடக்கலாம்.



இந்த ஷூ இரு அடுக்குகளைக் கொண்டிருக்கும். அடியில் உள்ள அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். ஷூவின் அடியில் உள்ள தகட்டில் ஏராளமான ண்துளைகள் இருக்கும். நாம் நடக்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் அழுத்தம் முதல் அடுக்கில் உள்ள நீரை மேலேறச் செய்யும்.



இதனால் கீழடுக்கில் ஏற்படும் வெற்றிடம் சுவருடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனை தாங்கி நிறுத்தும். இதனால் நாம் சுவரில் நடந்து செல்ல முடியும். அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகம் இதை வடிவமைத்துள்ளது.

Template by : kendhin x-template.blogspot.com