நலம் காட்டும் கடிகாரம்! `என்ன நல்லா இருக்கீங்களா?’
இப்படி நலம் விசாரிப்பது நமது பண்பாடு. இனி யாரும் உங்களை இப்படிக் கேட்டால் நீங்கள் மணி பார்ப்பதுபோல் கடிகாரத்தைப் பார்த்து `நலமாகத்தான் இருக்கிறேன்’ என்று பதில் சொல்லலாம். ஆமாம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதைக் காட்டும் கடிகாரம் வந்துவிட்டது.
ஐரோப்பிய ஆய்வுக்குழு ஒன்று நவீன கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் எலக்ட்ரானிக் பாலிமர் மற்றும் நவீன சென்சார் இருக்கும். இதை வழக்கமான கடிகாரம்போல் கையில் அணிந்து கொள்ளலாம். இதில் இருக்கும் நவீன கருவிகள் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து அறிவிக்கும்.
வியர்வை, உடல் வெப்பம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை கண்காணித்து நோய்த்தொற்றை கண்டுபிடிக்கும். இதற்காக எப்போதும் மின்காந்த அலைகளை உடலில் பரப்பிய வண்ணம் செயல் படும்.
மாரடைப்பு ஏற்படுவது, ரத்தம் உறைவது, ஈரப்பதம் குறைவது போன்ற பெரும்பாலான வியாதிகளின் அறிகுறிகளை மருத்துவ பரிசோதனைக்குச் செல்லாமலே காட்டிவிடும். வியாதிகளை ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் எளிதில் குணமாக்கி நலமாக வாழலாம்தானே!
Monday, September 13, 2010
நலம் காட்டும் கடிகாரம்!
Posted by
Sivaguru Sivasithan
at
6:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment