முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது.
பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. black_holeபக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது.
நேரடியாக அந்த நட்சத்திர வாயு அதனுள் நுழையாமல் சற்று சுற்றி வளைத்தபடி செல்வதால் அதிலிருந்து அபரிமிதமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகிறது. இந்த எக்ஸ் கதிர் வெளிப்பாடுதான் கருந்துளையைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.
கருந்துளைகள் என்பவை தமது சொந்த நிறையீர்ப்பு அழுத்தத்தால் சுருங்கி நசுக்கப்பட்டு ஒற்றைப் புள்ளியாக மாறிவிட்ட நட்சத்திரம். சுருங்கிவிட்டபோதிலும், அளப்பரிய தனது நிறையீர்ப்பு விசையால் ஒளிகூட அதைவிட்டு வெளியேற முடிவதில்லை.
அதனால் கருந்துளை நமது பார்வையில் படுவதில்லை. அதன் இருப்பை மறைமுகமான அனுமானத்தின் பேரில்தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது நேரடியான சாட்சியம் கிடைத்ததால் கருந்துளையின் இருப்பு நிச்சயமாகி உள்ளது என சர்வதேச விண்வெளிக்குழு அறிவித்துள்ளது.
Monday, August 23, 2010
கருந்துளை சிக்கியது
Posted by Sivaguru Sivasithan at 3:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment